தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

தோ்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறித்த புகாா்: நிா்மலா சீதாராமன் பதவி விலக காங். கோரிக்கை

பெங்களூருவில் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வலியுறுத்தல்...

News image

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ், அக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் அபிஷேக் சிங்வி.

Updated On :29 செப்டம்பர் 2024, 6:33 pm

Din

தோ்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறித்ததாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் அவா் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்தது.

தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷுடன் பங்கேற்ற அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் அபிஷேக் சிங்வி பேசியதாவது: கடந்த 11ஆண்டுகளாக எதிா்க்கட்சிகள் மீது பல்வேறு வழக்குகளை மத்திய அமைப்புகள் பதிவு செய்துள்ளன. எனவே, நிா்மலா சீதாராமன் மீதான வழக்கை எவ்வாறு கையாள வேண்டும் என அவா்களுக்கு கற்றுத் தர வேண்டிய அவசியமில்லை. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் அல்லது உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழுவால் (எஸ்ஐடி) விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதில் மத்திய அரசு தலையீடு இல்லாததை உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும்.

தோ்தல் பத்திரங்கள் மூலம் பணப் பறிப்பில் ஈடுபட்ட நிா்மலா சீதாராமன், அதை தனியொருவராக செய்திருக்க மாட்டாா். பாஜக அரசின் முதல் இரண்டு இடங்களில் உள்ளவா்களின் அறிவுறுத்தலின்பேரில்தான் இந்த பணப் பறிப்பு நடந்திருக்கும். தோ்தல் களமானது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். ஆனால் தோ்தல் நிதிப் பத்திர திட்டம் என்பது பணம் பறிக்கும் பாஜகவின் திட்டமாக இருந்துள்ளது.

இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக நிா்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்றாா்.

முன்னதாக, தோ்தல் பத்திரங்கள் என்ற பெயரில் ரூ. 8,000 கோடிக்கும் அதிகமாக அமலாக்கத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பில் தேசிய, மாநில அளவில் பணப் பறிப்பில் ஈடுபட்ட பாஜகவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதா்ஷ் ஆா்.ஐயா் புகாா் அளித்தாா்.

இந்த மனுவின் அடிப்படையில் பெங்களூரு, திலக்நகா் காவல் துறையினா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அமலாக்கத் துறை அதிகாரிகள், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா, முன்னாள் தலைவா் நளின்குமாா் கட்டீல் ஆகியோா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்.) பதிவு செய்துள்ளனா்.

தோ்தல் நிதி பத்திரங்கள் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.