திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

குஜராத்தில் தடுப்புச்சுவர் மீது பேருந்து மோதல்: 7 பேர் பலி, 14 பேர் காயம்

குஜராத்தில் தடுப்புச்சுவர் மீது மோதிய பேருந்து அடுத்தடுத்து மூன்று வாகனங்களிலும் மோதியதில் 7 பேர் பலியானார்க

News image

விபத்தில் சிக்கிய கார்.

Updated On :29 செப்டம்பர் 2024, 1:24 pm IST

குஜராத்தில் தடுப்புச்சுவர் மீது மோதிய பேருந்து அடுத்தடுத்து மூன்று வாகனங்களிலும் மோதியதில் 7 பேர் பலியானார்கள்.

குஜராத் மாநிலம், துவாரகா-கம்பாலியா தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது பேருந்து ஒன்று சனிக்கிழமை மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து அந்த பேருந்து அடுத்தடுத்து மூன்று வாகனங்களிலும் மோதியது. இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.

14 பேர் காயமடைந்தனர். நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு கம்பாலியா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காவலர்களின் கூற்றுப்படி, சாலையின் நடுவே கடந்த மாட்டைக் காப்பாற்ற ஓட்டுநர் முயற்சித்தபோது, ​​​​கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச்சுவர் மீது மோதியதோடு இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் மீதும் மோதியதாக தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.