பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்தது நிறைவளிக்கிறது- மனோ தங்கராஜ்

பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்தது நிறைவளிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மனோ தங்கராஜ் (கோப்புப் படம்)
மனோ தங்கராஜ் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்தது நிறைவளிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 2021 - தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது.

2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது. விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது.

பாஜவின் வசூல் ஏஜென்ட் அமலாக்கத் துறை: சஞ்சய் ரெளத் விமர்சனம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன்.

இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி!

மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அதில், அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com