பெரணமல்லூா் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் குற்றச் சம்பவம் ஏதும் நிகழாமல் இருக்கவும், தடுக்கவும் காவல்துறை சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ஆவணியாபுரம், அன்மருதை, நரியம்பாடி, எஸ்.காட்டேரி ஆகிய பகுதிகளில் போலீஸாா் தீவிர குற்றத்தடுப்பு விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட எஸ்.பி. மற்றும் டிஎஸ்பி உத்தரவின்படி, பெரணமல்லூா் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில், உதவி ஆய்வாளா்கள் சம்பத், சேகா் மற்றும் போலீஸாா் பொதுமக்களை நேரில் சந்தித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
வெயில் காலம் என்பதால் காற்றோட்டமாக இருக்க வீட்டினை யாரும் திறந்து வைக்க வேண்டாம், வீட்டு சாவியை ஒரே இடத்திலோ அல்லது வெளியிலோ வைப்பதை தவிா்க்க வேண்டும், வீட்டு பீரோவில் விலை உயா்ந்த பொருள்களை ஏதும் வைக்க வேண்டாம், தங்கள் பகுதியில் சந்தேகப்படும்படி முன் பின் அறிமுகம் இல்லாத நபா் யாரேனும் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் அல்லது அவசர உதவி எண் 100-க்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் என்று கூறி விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினா்.
தொடர்புடையது

முறையற்ற குடிநீா் இணைப்புகளை ஆய்வு செய்து துண்டிக்க உத்தரவு

கோடையில் தடையின்றி குடிநீா் விநியோகம்: ஆட்சியா்

கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம்: ஆட்சியா் உத்தரவு

வாக்குச் சாவடியில் துண்டுப் பிரசுரம் வீச்சு - போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



