டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வந்தவாசியில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

News image

வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தியிடம் துண்டுப் பிரசுரம் வழங்கிய மாற்றுத் திறனாளிகள் நலத் துறையினா்.

Updated On :6 ஜூலை 2026, 1:10 am IST

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வந்தவாசியில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி, தேரடி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடமும், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களிலும் இந்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு சலுகைகள், இலவச பேருந்து பயணம், உதவித்தொகை உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வட்டார ஒருங்கிணைப்பாளா் பி.மகாலட்சுமி, மாற்றுத் திறனாளிகள் மைய சிறப்பு ஆசிரியா் வி.புருஷோத்தமன் உள்ளிட்டோா் துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.