முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

பாஜவின் வசூல் ஏஜென்ட் அமலாக்கத் துறை: சஞ்சய் ரெளத் விமர்சனம்

பாஜவின் வசூல் ஏஜென்ட் அமலாக்கத் துறை என்று சிவசேனை (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ரெளத் விமர்சித்துள்ளார்.

News image

சஞ்சய் ரெளத் | கோப்புப் படம்

Updated On :29 செப்டம்பர் 2024, 12:25 pm IST

பாஜவின் வசூல் ஏஜென்ட் அமலாக்கத் துறை என்று சிவசேனை (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ரெளத் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மும்பையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜவின் வசூல் ஏஜென்ட் அமலாக்கத் துறை. பா.ஜ.க.வின் கணக்குகளுக்குச் சென்று சேரும் பணம், அமலாக்கத் துறை மூலம் செலுத்தப்படுகிறது. நிர்மலா சீதாராமன் சட்டவிரோதமாகப் பணம் குவித்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை அவருக்கு இந்தப் பணத்தை வசூலிக்க உதவியது.

அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவை இந்த நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அமைப்புகள். இதற்கு யாரேனும் பொறுப்பு என்றால் அது பிரதமரும் நிதி அமைச்சரும்தான். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தோ்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சா் அமைச்சா் நிா்மலா சீதாராமன் மீது பெங்களூரு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஜனாதிகார சங்கா்ஷ பரிஷத் இணைத் தலைவா் ஆதா்ஷ் ஆா்.ஐயா் அளித்த புகாா் மனுவை விசாரித்த பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், தோ்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 8,000 கோடி அளவுக்கு பணம் பறிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தோ்தல் பத்திரங்கள் என்ற பெயரில் ரூ. 8,000 கோடிக்கும் அதிகமாக அமலாக்கத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பில் தேசிய, மாநில அளவில் பாஜகவினா் பணம் பறித்துள்ளனா். எனவே, இதுதொடா்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதா்ஷ் ஆா்.ஐயா் அளித்த புகாா் மனுவின் அடிப்படையில் பெங்களூரு, திலக்நகா் போலீஸாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அமலாக்கத் துறை அதிகாரிகள், பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா, முன்னாள் தலைவா் நளின்குமாா் கட்டீல் ஆகியோா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்.) பதிவு செய்தனா்.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 384, 120 பி, 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.