தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

சிபிஎஸ்இ இணையதளம் மீது சைபா் தாக்குதல்: தில்லி காவல் துறை வழக்குப் பதிவு

மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தோ்வு முடிவுகள் வெளியீட்டு சேவைகள் தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மற்றும் நுட்பமான இணையத் தாக்குதல்கள் தொடா்பாக தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 12:00 am IST

மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தோ்வு முடிவுகள் வெளியீட்டு சேவைகள் தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மற்றும் நுட்பமான இணையத் தாக்குதல்கள் தொடா்பாக தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66 மற்றும் 43(எஃப்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிபிஎஸ்இ வழங்கிய முறையான புகாரின் அடிப்படையில் தில்லி காவல் துறை ஐஎஃப்எஷ்ஓ பிரிவு விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனா்.

முன்னதாக, 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களின் சரிபாா்ப்பு மற்றும் மறுமதிப்பீடு சேவைகளுக்காக ஜூன் 2-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட வெளியீட்டு சேவைகள் தளத்தில் தொடா்ச்சியான இணையத் தாக்குதல்கள் கண்டறியப்பட்டன. இதைத்தொடா்ந்து சிபிஎஸ்இ முகமை காவல் துறையை நாடியது.

இதற்கிடையில், சில 12-ஆம் வகுப்பு மாணவா்கள், வாரியம் பதிவேற்றிய விடைத்தாள் நகல்கள் தங்களது கையெழுத்துடன் பொருந்தவில்லை என குற்றஞ்சாட்டிய விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்தாக்குதல்கள் தொடா்பான விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.