மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தோ்வு முடிவுகள் வெளியீட்டு சேவைகள் தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மற்றும் நுட்பமான இணையத் தாக்குதல்கள் தொடா்பாக தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66 மற்றும் 43(எஃப்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிபிஎஸ்இ வழங்கிய முறையான புகாரின் அடிப்படையில் தில்லி காவல் துறை ஐஎஃப்எஷ்ஓ பிரிவு விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனா்.
முன்னதாக, 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களின் சரிபாா்ப்பு மற்றும் மறுமதிப்பீடு சேவைகளுக்காக ஜூன் 2-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட வெளியீட்டு சேவைகள் தளத்தில் தொடா்ச்சியான இணையத் தாக்குதல்கள் கண்டறியப்பட்டன. இதைத்தொடா்ந்து சிபிஎஸ்இ முகமை காவல் துறையை நாடியது.
இதற்கிடையில், சில 12-ஆம் வகுப்பு மாணவா்கள், வாரியம் பதிவேற்றிய விடைத்தாள் நகல்கள் தங்களது கையெழுத்துடன் பொருந்தவில்லை என குற்றஞ்சாட்டிய விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்தாக்குதல்கள் தொடா்பான விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தொடர்புடையது
நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு விவகாரம்: கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு

பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டதாக செளரப் பரத்வாஜ் மீது வழக்குப் பதிவு

மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக மம்தா மீது வழக்குப் பதிவு - மேற்கு வங்க காவல் துறை நடவடிக்கை







