அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

உதய்பூர்: கோவிலுக்கு வெளியே உறங்கிய பூசாரி விலங்கு தாக்கி பலி

உதய்பூரில் கோவிலுக்கு வெளியே உறங்கிக்கொண்டிருந்த பூசாரி விலங்கு தாக்கி பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :30 செப்டம்பர் 2024, 8:21 am

DIN

உதய்பூரில் கோவிலுக்கு வெளியே உறங்கிக்கொண்டிருந்த பூசாரி விலங்கு தாக்கி பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கோகுண்டாவில் உள்ள ரத்தோடோ கா குடா பகுதியில் உள்ள கோயிலுக்கு வெளியே விஷ்ணு கிரி(65) பூசாரி ஞாயிற்றுக்கிழமை உறங்கியிருக்கிறார். அப்போது ​​அவரை காட்டு விலங்கு காட்டுக்குள் இழுத்துச் சென்று கொன்றது.

அவரின் சிதைந்த உடல் திங்கள்கிழமை காலை கோவிலில் இருந்து 150 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.

பூசாரியை சிறுத்தை தாக்கியதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இருப்பினும், சிறுத்தை அல்லது வேறு ஏதேனும் விலங்கு தாக்கியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலிகளின் அட்டகாசத்தால் கோகுந்தா பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். சிறுத்தை தாக்குதலுக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.

இதனிடையே பூசாரி ஒருவர் காட்டு விலங்கு தாக்கி பலியான நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.