காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் அமேதி நாடாளுமன்றத் தொகுதியை அடையும் என அக்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
பிப்.19ல் பிரதாப்கர் மாவட்டத்தின் ராம்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அத்தெஹாவிலிருந்து நடைப்பயணம் தொடங்கி கக்வாவில் நுழையும் என்று காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் அனில் சிங் தெரிவித்தார்.
அதன் பிறகு மகாராஜ்பூர், அமேதி, கௌரிகஞ்ச், காந்திநகர், ஜெய்ஸ் மற்றும் ஃபர்சத்கஞ்ச் வழியாக ரேபரேலிக்கு நடைப்பயணம் தொடரும் என்று அவர் கூறினார்.
அமேதியின் கௌரிகஞ்சில் உள்ள பாபுகஞ்ச் சாக்ரா ஆசிரமம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காந்தி உரையாற்ற உள்ளார். இது தவிர, பயணத்தின் போது பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் உரையாற்றுகிறார்.
ஜனவரி 14ஆம் தேதி மெயின்பூரில் இருந்து தொடங்கிய பயணம், பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நுழைந்து 11 நாள்களில் 20 மாவட்டங்களுக்குச் செல்லும்.
ரேபரேலியில் நடைபெறும் யாத்திரையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்.