தில்லியில் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தரையிறக்க இயலாத சூழல் நிலவுகிறது. தில்லி வந்தடைய வேண்டிய 9 விமானங்கள் வேறு நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
அதிகாலை 4.30 முதல் 10.30 வரை தரையிறங்க வேண்டிய விமானங்கள் திருப்பப்பட்டுள்ளன.
பன்னாட்டு விமானம் ஒன்று முதலில் மும்பைக்குத் திருப்பப்பட்டது. அங்கும் தரையிறக்க முடியாததால் ஜெய்ப்பூருக்குத் திருப்பப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: முன்னாள் முதல்வர் இவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை: ஏக்நாத் ஷிண்டே
தில்லி மற்றும் வட இந்தியாவின் பகுதிகளில் கடுமையான பனி படலம் தென்படுகிறது. பனியால் தெளிவாக பார்க்க முடியாத சூழல் நிலவுகிறது.