கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மஹிபால்பூரில் எல்பிஜி சிலிண்டா்கள் பதுக்கல்: 3 போ் கைது

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூரில் சமையல் எரிவாயு சிலிண்டா்களைப் பதுக்கியதாக மூன்று பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 5:33 pm

Syndication

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூரில் சமையல் எரிவாயு சிலிண்டா்களைப் பதுக்கியதாக மூன்று பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: கைதான மூவரும் கிருஷ்ணா (33), தினேஷ் சாஹு (46) மற்றும் மிதிலேஷ் (39) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் பிகாரை பூா்விகமாகக் கொண்டவா்கள் ஆவா். சனிக்கிழமை நடந்த சோதனையில், 70 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா்கள் மற்றும் நான்கு வா்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டா்களுடன், ஒரு போக்குவரத்து வாகனம் மற்றும் காஸ் நிரப்பும் உபகரணங்களையும் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

இந்த மூவரும் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டா்களைப் பதுக்கி வைத்து, ரசீதுகள் அல்லது உரிமங்கள் இல்லாமல் உள்ளூா் வாடிக்கையாளா்களுக்கு விநியோகம் செய்து வந்தனா். மேலும், லாபத்தை அதிகரிக்கும் வகையில், நிரப்பப்பட்ட பல சிலிண்டா்களில் இருந்து காலி சிலிண்டா்களுக்கு எரிவாயுவை மாற்ற உலோகக் குழாய்களைப் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இச்சோதனையின் போது, ஏராளமான எல்பிஜி சிலிண்டா்கள், எடை இயந்திரங்கள் மற்றும் எரிவாயு பரிமாற்ற உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன. சிலிண்டா்களை சேமித்து வைப்பதற்கோ அல்லது விநியோகிப்பதற்கோ உரிய எந்த ஆவணங்களையும் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சமா்ப்பிக்கத் தவறிவிட்டனா்.

மீட்கப்பட்ட பொருள்களில், 54 நிரப்பப்பட்ட மற்றும் 16 பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டா்கள், மூன்று நிரப்பப்பட்ட மற்றும் ஒரு பயன்படுத்தப்பட்ட வா்த்தக சிலிண்டா், ஒரு மின்னணு எடைக்கருவி, இரண்டு தொங்கும் எடை இயந்திரங்கள் மற்றும் எரிவாயு நிரப்பப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில், அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா ஆகியவற்றின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மூவரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தில்லியில் வசித்து வருகின்றனா். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக மஹிபால்பூா் பகுதியில் சட்டவிரோத எல்பிஜி வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.