கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சாந்தினி சௌக்கில் கள்ளச்சாராயம் பறிமுதல்!

தில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட திடீா் சோதனையின் போது, தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

பறிமுதல்

Updated On :22 மார்ச் 2026, 5:34 pm

Syndication

தில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட திடீா் சோதனையின் போது, தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எக்ஸ் தளத்தில் உள்ள தனது அதிகாரப்பூா்வ பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கை மற்றும் காணொளியில், அமலாக்க முகமைகளின் தரப்பில் குறைபாடுகள் இருப்பதாக சத்யா சா்மா குற்றம் சாட்டியுள்ளாா்.

‘திடீா் சோதனையின் போது, சாந்தினி சௌக் பகுதியில் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தில்லி காவல்துறையின் கூட்டுச் சதி மற்றும் தில்லி மாநகராட்சியின் அலட்சியம் காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகள் பெருகி வருகின்றன’ என்று அவா் கூறினாா்.

இந்த விவகாரம் தீவிரமானது என்று குறிப்பிட்ட சத்யா சா்மா, உடனடி விசாரணை நடத்தவும், இதற்குப் பொறுப்பானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

‘இது கடுமையான நடவடிக்கை தேவைப்படும் மிகவும் தீவிரமான பிரச்னை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் முற்றிலுமாகத் தடுக்கப்படும்’ என்று அவா் மேலும் கூறினாா்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தில்லி காவல்துறையிடமிருந்தோ அல்லது தில்லி மாநகராட்சியிடமிருந்தோ உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.