ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அரைநாள் செயல்படாது என்ற உத்தரவை, மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் மூலவர் பிரதிஷ்டை விழா ஜன. 22-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
பிரதிஷ்டை நாளான திங்கள்கிழமையன்று கொண்டாட்டங்களில் மத்திய அரசுப் பணியாளா்களும் பங்கேற்பதற்கு ஏதுவாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை அமைப்புகளுக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறையை மத்திய அரசு அறிவித்து இருந்தது.
அதேபோல், தில்லி எய்ம்ஸ் மருத்துமனையும் காலையிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஜிப்மரில் அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் நாளை வழங்கப்படும்
வெளி நோயாளிகள் பிரிவு நாளை வழக்கம் போல் செயல்படும் எனவும், முன்னதாக அறிவித்தப்படி அவசர சிகிச்சை பிரிவும் செயல்படும் என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

ஓடும் ரயில்கள் மீது கற்கள் எறிந்தால் கடும் நடவடிக்கை! சேலம் ரயில்வே கோட்டம் எச்சரிக்கை

தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு!

போலி உறுப்பினா்களுடன் செயல்படும் கைத்தறி நெசவாளா் சங்கங்கள் மீது நடவடிக்கை: அமைச்சா் ம.விஜய் பாலாஜி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



