
அந்தமான் நிகோபார் தீவுகளில் செவ்வாய்க்கிழமை மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிகோபார் தீவுகளில் இன்று மாலை 6.18 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) கூறியுள்ளது.
இதையும் படிக்க | அயோத்தியில் தடுப்புகளை உடைத்தெறிந்து அத்துமீறிய மக்கள் கூட்டம்!
தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நிகோபார் தீவுகளில் செவ்வாய்க்கிழமை மாலை 6.18 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடல் பகுதியில் 21 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவு கோலில் 4.3-ஆகப் பதிவானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் வரவில்லை.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை காலையில் இப்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையும் படிக்க | ஒரே நாளில் 21 ஆயிரம் ஆவணங்கள் பதிவு! ரூ.168 கோடி வருவாய்!!
இது பொதுவாக நிகழும் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஆகும். ரிக்டா் அளவு கோலில் 6 புள்ளிகளுக்கு மேல் அதிா்வு பதிவாகும்போதுதான் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.