ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அகமதுநகரில் பயங்கர விபத்து: 6 பேர் பலி!

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துப் பேருந்து லாரி மற்றும் காரின் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 

News image

கோப்புப்படம்

Updated On :24 ஜனவரி 2024, 6:12 am

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துப் பேருந்து லாரி மற்றும் காரின் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்து அகமதுநகர்-கல்யாண் சாலையில் தவாலிபுரி பாடா அருகே அதிகாலை 2.30 மணிக்கு நடந்தது. 

கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் ஒன்று கவிழ்ந்ததால், அதிலிருந்து கரும்புகளை இறக்குவதற்கு மற்றொரு டிராக்டர் கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு வந்த கார் ஓட்டுநரும், வண்டியை நிறுத்தி, கரும்பு இறக்கும் பணியில் ஈடுபட்டார். 

அப்போது அங்கு வந்த அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து லாரி மற்றும் காரின் மீது மோதியது. தொழிலாளர்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.