மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோயில் வழிபாட்டு நிகழ்வில் விபத்து, ஒருவர் உயிரிழப்பு!

தில்லியில் கால்காஜி கோயிலில் மத வழிபாட்டு நிகழ்வில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:29 am

தில்லியில் கால்காஜி கோயிலில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிர்ழந்துள்ளார், 17 பேர் காயமடைந்துள்ளனர். 

கடந்த சனிக்கிழமை தில்லியில் உள்ள கால்காஜி கோயிலில் நடந்த மத வழிபாட்டு நிகழ்வில் 1600 பேர் பலந்துகொண்டனர். இந்த விழாவிற்காக எந்த முன்னனுமதியும் வழங்கப்படவில்லை என துணை காவல்கண்காணிப்பாளர் ராஜேஷ் டியோ தெரிவித்துள்ளார். 

திங்கள் கிழமை அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இரும்புசட்டத்தால் தாங்கப்படும் மரத்தாலான மேடை ஒன்று, விழா ஒருங்கிணைப்பாளர்களின் குடும்பத்தினருக்கும், முக்கிமானவர்களுக்காகவும் அமைக்கப்பட்டிருந்தது.

அந்த மேடை எடை தாங்காமால நிலை குலைந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.  இடிந்த அந்த மேடை கீழே உட்கார்ந்திருந்தவர்கள் மீது விழுந்துள்ளது. 

தீயணைப்புப்படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்தில் காயப்பட்டவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். அதில் 45 வயதான பெண் ஒருவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.

விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீது மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக டிசிபி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.