பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: இரு டிரைவர்களும் பலி!

இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து தொடர்பாக...

News image

இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

படம்: பிடிஐ

Updated On :1 ஏப்ரல் 2025, 6:08 am

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 இரு டிரைவர்களும் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

பசுமை எரிசக்தி தொழிற்சாலைக்கு நிலக்கரி கொண்டு செல்லும் வழித்தடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த வழித்தடம் பசுமை எரிசக்தி தொழிற்சாலைக்குச் சொந்தமானவை. இவை மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லப் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்விபத்து இன்று(ஏப். 1) அதிகாலை பர்ஹைட் காவல் நிலையப் பகுதியில் உள்ள போக்னாதி அருகே ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்குப் பின்னர், இரு சரக்கு ரயில்களும் தடம் புரண்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்த விபத்து குறித்து காவல் துறை கண்காணிப்பாளர் சாஹீர்கஞ்ச் அமீர் குமார் கூறுகையில், “அதிகாலை 3 மணிக்கு நடந்த இவ்விபத்தில் 2 ரயில் ஓட்டுநர்கள் தியானேஸ்வரர் மால்(35), அம்புஜ் மஹதே(35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

2 உதவி ஓட்டுநர்கள், 2 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.

விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.