புது தில்லி: தங்களது சொத்து விவரங்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழங்கவும், அதனை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றவும் நீதிபதிகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், கடந்த மார்ச் மாதம் கணக்கில் வராத பல கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் வழங்குவதற்கு ஒருமனதாக ஒப்புக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டு வழங்கப்படும் சொத்து விவரங்கள், உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், இதன் மூலம் நீதிபதிகளின் சொத்து விவரங்களை மக்கள் பார்வையிட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, அவர் முன்பு பதவி வகித்த அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். உள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரப்பான் பூச்சிகளும் தலைமை நீதிபதியின் சர்ச்சைக் கருத்துகளும்!
வரி செலுத்தாத நிறுவனப் பெயா்களை இணையத்தில் வெளியிட நடவடிக்கை: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

வழக்குரைஞா் மீதான தாக்குதல்: வழக்கை தில்லி குற்றப்பிரிவுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணங்களை அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



