
அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் 8 புதிய நீதிபதிகளை நியமிக்கும் முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் ஏப்ரல் 2ல் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதைத் தொடர்ந்து அந்த கூட்டத்தில் அலகாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக அதிகாரிகளை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜிதேந்திர குமார் சின்ஹா, அப்துல் ஷாஹித், அனில் குமார் எக்ஸ், தேஜ் பிரதாப் திவாரி, சந்தீப் ஜெயின், அவ்னிஷ் சக்சேனா, மதன் பால் சிங் மற்றும் ஹர்வீர் சிங் ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.