கர்நாடகத்தில் பழுதாகி நின்ற லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.
கர்நாடகம் மாநிலம் ஜேவர்கி நகரில் நெலோகி கிராஸ் அருகே டயர் வெடித்து பழுதாகிய கனரக லாரி ஒன்று, சனிக்கிழமை அதிகாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதிகாலை 3.30 மணியளவில் அவ்வழியாகச் சென்ற தனியார் பேருந்து, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகளில் 13 வயது சிறுமி உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; மேலும், பயணிகள் பலர் காயமடைந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பாகல்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கலபுராகி மாவட்டத்தில் உள்ள தர்காவுக்கு சென்று கொண்டிருந்த சமயத்தில் விபத்து ஏற்பட்டதாகவும் காவல் அதிகாரிகள் கூறினர்.
விபத்தினைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து பேருந்தின் ஓட்டுநர் தப்பியோடி விட்டார். தேடப்பட்டு வரும் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

வாழப்பாடி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 12 பேர் படுகாயம்!

நேபாளம்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி

லாரி மீது சொகுசுப் பேருந்து மோதி ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



