பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

துணை வடிகால்களை ஆய்வுசெய்தார் தில்லி முதல்வர்!

தில்லியில் துணை வடிகால் தூர்வாரும் பணிகள் கண்காணிப்பு..

News image

முதல்வர் ரேகா குப்தா

Updated On :10 ஏப்ரல் 2025, 2:41 pm IST

தேசிய தலைநகரில் துணை வடிகால்களை இன்று முதல்வர் ரேகா குப்தா ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

தில்லியில் உள்ள ஒவ்வொரு பெரிய வடிகால்களையும் நாங்கள் இன்று பார்வையிடுகிறோம். யமுனை நதியில் கலக்கும் 22 பெரிய வடிகால்களைத் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பணிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஏசி அறைகளிலிருந்து இயக்கப்பட்ட முந்தைய அரசைப் போல் அல்லாமல், நாங்கள் களத்திலிருந்து பணியாற்றி வருகிறோம். எங்கள் அரசு மக்களுக்காக உழைக்க உறுதி பூண்டுள்ளது.

முன்னதாக, தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, அமைச்சர் பர்வேஷ் வர்மா ஆகியோருடன் சேர்ந்து, தேசிய தலைநகரில் உள்ள வஜிராபாத்தில் உள்ள துணை வடிகாலை ஆய்வு செய்தோம். தில்லி அரசு வடிகால்களைச் சரியான நேரத்தில் அகற்றுவதை உறுதிசெய்யும் சிறப்புப் பொறுப்பை வெள்ளம் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு வழங்கியுள்ளது.

வஜிராபாத் வடிகால், யமுனையில் பாயும் முக்கிய இடங்களில் ஒன்றாகும், எனவே, நதியைச் சுத்தம் செய்வதில் இது மிகவும் முக்கியமானது. குறிப்பாக, தில்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களை பாஜக கைப்பற்றிய பிறகு, யமுனை நதியைச் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது,

தில்லியில் தேர்தலின்போது யமுனையில் மாசுபாடு ஒரு முக்கிய பிரச்னையாக இருந்தது, ஆக்கிரமிப்புகள், வெள்ள மேலாண்மை தொடர்பாக அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று குறிவைத்தன.

பாஜக ஆம் ஆத்மி கட்சியைத் தாக்கியது மற்றும் யமுனையைச் சுத்தம் செய்யும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகக் குற்றம் சாட்டியது. இதுதவிர, பாஜக தனது தேர்தல் அறிக்கையில் யமுனையை சுத்தம் செய்வது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.