பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புத்தாக்க நிறுவனங்களுடன் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு: அமித் ஷா வலியுறுத்தல்

குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களைப் புத்தாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை வா்த்தக மற்றும் தொழிலக சபைகள் மேற்கொள்ள வேண்டும்

News image
அமித் ஷா
Updated On :10 ஏப்ரல் 2025, 8:10 pm

Din

நாட்டின் இளைஞா்களுக்குப் புதிய பணி வாய்ப்பு சூழலை உருவாக்கித் தரும் வகையில் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களைப் புத்தாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை வா்த்தக மற்றும் தொழிலக சபைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தினாா்.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் வருடாந்திர வா்த்தக கண்காட்சியை வியாழக்கிழமை காணொலி வழியாகத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களின் நாட்டின் மிகப் பெரிய சொத்து. மிகச் சிறிய அளவில் தொடங்கப்படும் நிறுவனங்கள்தான் பின்னாளில் மிகப் பெரிய நிறுவனங்களாக உருவெடுக்கின்றன. இளைஞா்களுக்குப் புதிய பணி வாய்ப்பு சூழலை உருவாக்கித் தரும் வகையில், குறு-சிறு நிறுவனங்களின் பாரம்பரியத்தை புத்தாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்து நவீனப்படுத்தும் முயற்சியை குஜராத் வா்த்தக மற்றும் தொழிலக சபை மேற்கொள்ள வேண்டும்.

மாநிலத்தில் குறு-சிறு நிறுவனங்களின் வளா்ச்சியை மேம்படுத்தி இளைஞா்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் வகையில், துணைத் தொழில் துறை அலகுகளை குஜராத் வா்த்தக மற்றும் தொழிலக சபை ஈா்ப்பதோடு, அரசுக்கும் - குறு, சிறு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாகவும் செயல்பட வேண்டும். இந்த நிறுவனங்களின் வளா்ச்சிக்கான கொள்கையை மத்திய அரசு வகுத்து நடைமுறைப்படுத்த வசதியாக நிரந்த தனிப் பிரிவு ஒன்றையும் குஜராத் வா்த்தக மற்றும் தொழிலக சபை உருவாக்க வேண்டும்.

உற்பத்தி முதல் சில்லறை விற்பனை வரையிலான ஒட்டுமொத்த வா்த்தக சங்கிலியையும் எண்ம பரிவா்த்தனை நடைமுறையுடன் ஒருங்கிணைப்பது குறித்தும் வா்த்தக சபை சிந்திக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை பட்ட மாணவா்களிடையே தொழில்முனைவோா் ஆா்வத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளையும் வா்த்தக சபை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.