மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜாலியன்வாலா பாகில் உயிரிழ்ந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி

ஜாலியன்வாலா பாக் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது சுட்டுக்கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.

News image
Updated On :13 ஏப்ரல் 2025, 11:03 pm

DIN

ஜாலியன்வாலா பாக் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது சுட்டுக்கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.

நம் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றபோது கொண்டுவரப்பட்ட எதேச்சாதிகார ரௌலட் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபின் அமிருதசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலா பாக் பகுதியில் கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அமைதியாகக் கூடிய அவர்கள் மீது பிரிட்டிஷ் போலீஸார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.

ஜாலியன்வாலா பாக் பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் அன்னை இந்தியாவைக் காக்க ஜாலியன்வாலா பாக் பகுதியில் தங்களின் உயிரைத் தியாகம் செய்த அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் புகழஞ்சலி செலுத்துகிறேன். அவர்களது தியாகமானது நமது சுதந்திரப் போராட்டத்தை வலுவடையச் செய்தது. அவர்களுக்கு இந்தியா என்றென்றும் கடன்பட்டுள்ளது.

ஜாலியன்வாலாபாக் தியாகிகளிடம் இருந்து உத்வேகம் பெற்று இந்தியாவின் வளர்ச்சிக்கு நாட்டு மக்கள் தொடர்ந்து பங்களிப்பார்கள் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மரியாதை: இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் 'ஜாலியன்வாலா பாக் தியாகிகளுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களது உணர்வுகளை வரும் தலைமுறைகள் எப்போதும் நினைவில் கொண்டிருக்கும். நமது நாட்டின் சரித்திரத்தில் ஜாலியான்வாலா பாக் என்பது ஒரு கருப்பு அத்தியாயமாகும். இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் தியாகமானது நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.