மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கழிப்பறை காகிதத்தில் ராஜிநாமா கடிதம்!

கழிப்பறையில் பயன்படுத்தப்படும் காகிதத்தில் எழுதிக் கொடுக்கப்பட்ட ராஜிநாமா கடிதம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

News image
கழிப்பறை காகிதத்தில் ராஜிநாமா கடிதம்- படம் - லிங்க்ட்இன் | Angela Yeoh
Updated On :15 ஏப்ரல் 2025, 3:54 pm

DIN

கழிப்பறையில் பயன்படுத்தப்படும் காகிதத்தில் எழுதிக் கொடுக்கப்பட்ட ராஜிநாமா கடிதம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அலுவலகம் தன்னை எப்படி நடத்தியதோ அதற்கேற்ற கடிதத்தில் ராஜிநாமா கடிதம் கொடுத்துள்ளதாக அக்கடிதத்தில் பணியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஏஞ்சலா யேஹோ என்ற பெண் (தனியார் நிறுவன இயக்குநர்), தனது ராஜிநாமா கடிதத்தை லிங்க்ட்இன் வலைதளப் பக்கத்தில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

கழிப்பறையில் பயன்படுத்தப்படும் காகிதத்தில் ராஜிநாமா செய்வதாக எழுதியுள்ள அக்கடிதத்தில், ''இந்த நிறுவனம் என்னை எவ்வாறு நடத்தியது என்பதைக் குறிப்பிடும் விதமாகவே இத்தகைய காகிதத்தில் ராஜிநாமா கடிதத்தை எழுதுகிறேன். நான் ராஜிநாமா செய்கிறேன்'' என எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தை புகைப்படம் எடுத்து இணையப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அவரின் இந்தப் புகைப்படம், வேலையிடத்தில் பணியாளர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இருப்பதாகப் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

புகைப்படத்துடன் அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது,

’பணியிடத்தில் உங்களுக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களை நன்னடத்தையுடன் அணுகுங்கள். உண்மையாகப் பாராட்டுங்கள். அவர்கள் அந்த நிறுவனத்தை விட்டுச் செல்லும் சூழல் ஏற்பட்டாலும், நன்றியுணர்வுடன் வெளியேற வேண்டும். மனக்கசப்புடன் அல்ல.

வெளிப்படையாகப் பாராட்டுவது அவர்களை தக்கவைத்துக்கொள்ளும் கருவி மட்டும் அல்ல; அவர்கள் எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறார்கள் என்பதன் வெளிப்பாடாகும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்காக மட்டும் அல்ல; எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதற்காகவும் அது அமையும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

அங்கீகாரம் கொடுக்காமல் உழைப்பை மட்டும் பிழியும் நிறுவனத்திற்கு, கழிப்பறை காகிதத்தில் ராஜிநாமா செய்துவிட்டு வந்த அப்பெண்மணியை பலரும் வியப்புடன் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.