வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கழிப்பறை காகிதத்தில் ராஜிநாமா கடிதம்!

கழிப்பறையில் பயன்படுத்தப்படும் காகிதத்தில் எழுதிக் கொடுக்கப்பட்ட ராஜிநாமா கடிதம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

News image

கழிப்பறை காகிதத்தில் ராஜிநாமா கடிதம் - படம் - லிங்க்ட்இன் | Angela Yeoh

Updated On :15 ஏப்ரல் 2025, 9:24 pm IST

கழிப்பறையில் பயன்படுத்தப்படும் காகிதத்தில் எழுதிக் கொடுக்கப்பட்ட ராஜிநாமா கடிதம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அலுவலகம் தன்னை எப்படி நடத்தியதோ அதற்கேற்ற கடிதத்தில் ராஜிநாமா கடிதம் கொடுத்துள்ளதாக அக்கடிதத்தில் பணியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஏஞ்சலா யேஹோ என்ற பெண் (தனியார் நிறுவன இயக்குநர்), தனது ராஜிநாமா கடிதத்தை லிங்க்ட்இன் வலைதளப் பக்கத்தில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

கழிப்பறையில் பயன்படுத்தப்படும் காகிதத்தில் ராஜிநாமா செய்வதாக எழுதியுள்ள அக்கடிதத்தில், ''இந்த நிறுவனம் என்னை எவ்வாறு நடத்தியது என்பதைக் குறிப்பிடும் விதமாகவே இத்தகைய காகிதத்தில் ராஜிநாமா கடிதத்தை எழுதுகிறேன். நான் ராஜிநாமா செய்கிறேன்'' என எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தை புகைப்படம் எடுத்து இணையப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அவரின் இந்தப் புகைப்படம், வேலையிடத்தில் பணியாளர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இருப்பதாகப் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

புகைப்படத்துடன் அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது,

’பணியிடத்தில் உங்களுக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களை நன்னடத்தையுடன் அணுகுங்கள். உண்மையாகப் பாராட்டுங்கள். அவர்கள் அந்த நிறுவனத்தை விட்டுச் செல்லும் சூழல் ஏற்பட்டாலும், நன்றியுணர்வுடன் வெளியேற வேண்டும். மனக்கசப்புடன் அல்ல.

வெளிப்படையாகப் பாராட்டுவது அவர்களை தக்கவைத்துக்கொள்ளும் கருவி மட்டும் அல்ல; அவர்கள் எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறார்கள் என்பதன் வெளிப்பாடாகும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்காக மட்டும் அல்ல; எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதற்காகவும் அது அமையும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

அங்கீகாரம் கொடுக்காமல் உழைப்பை மட்டும் பிழியும் நிறுவனத்திற்கு, கழிப்பறை காகிதத்தில் ராஜிநாமா செய்துவிட்டு வந்த அப்பெண்மணியை பலரும் வியப்புடன் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.