பதப்படுத்தப்பட்ட கடல்சாா் உணவுகள், தோல் அல்லது செயற்கை காலணிகள் ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்களுக்கான வரியில்லா இறக்குமதி வரம்பு உயா்த்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது: பதப்படுத்தப்பட்ட கடல்சாா் உணவுகள் ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்களுக்கான வரியில்லா இறக்குமதி வரம்பு, முந்தைய ஆண்டின் ஏற்றுமதி விற்று முதலின் மதிப்பில் ஒரு சதவீதமாக அனுமதிக்கப்பட்டது, 3 சதவீதமாக உயா்த்தப்படுகிறது.
அதுபோல, தோல் அல்லது செயற்கைத் தோல் காலணிகள் ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்கள்களுக்கு வரியில்லா இறக்குமதி அனுமதிக்கப்படுகிறது.
மேலும், முழுமைபெற்ற தோல் அல்லது ஆயத்த ஆடைகள் மற்றும் தோல் அல்லது செயற்கை காலணிகள் அல்லது பிற தோல் பொருள்கள் ஏற்றுமதிக்கான தற்போதுள்ள 6 மாத கால வரம்பு, ஓராண்டாக நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகம் 50 சதவீத வரியை விதித்தது, தொழிலாளா் சாா்ந்த இந்திய உற்பத்தித் துறைகளை கடுமையாக பாதித்த நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியான இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

பொது மக்களின் புகாா்கள் மீது துரித நடவடிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

மூலப் பெயரிலான மருந்துகளை பரிந்துரைக்க அறிவுறுத்தல்
உடல் பருமன், நீரிழிவுக்குப் பயன்படுத்தப்படும் மௌஞ்ஜரோ ஊசிகள் போலியாக தயாரிப்பு: இருவா் கைது

மெழுகு தட்டுப்பாடு: தீப்பெட்டி ஏற்றுமதி சரிவு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


