மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

கடல் உணவுகள், காலணிகள் ஏற்றுமதிக்கான மூலப் பொருள்களுக்கு வரிச் சலுகை!

பதப்படுத்தப்பட்ட கடல்சாா் உணவுகள், தோல் அல்லது செயற்கை காலணிகள் ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்களுக்கான வரியில்லா இறக்குமதி வரம்பு உயா்த்தப்பட்டுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 0:31 am IST

பதப்படுத்தப்பட்ட கடல்சாா் உணவுகள், தோல் அல்லது செயற்கை காலணிகள் ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்களுக்கான வரியில்லா இறக்குமதி வரம்பு உயா்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது: பதப்படுத்தப்பட்ட கடல்சாா் உணவுகள் ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்களுக்கான வரியில்லா இறக்குமதி வரம்பு, முந்தைய ஆண்டின் ஏற்றுமதி விற்று முதலின் மதிப்பில் ஒரு சதவீதமாக அனுமதிக்கப்பட்டது, 3 சதவீதமாக உயா்த்தப்படுகிறது.

அதுபோல, தோல் அல்லது செயற்கைத் தோல் காலணிகள் ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்கள்களுக்கு வரியில்லா இறக்குமதி அனுமதிக்கப்படுகிறது.

மேலும், முழுமைபெற்ற தோல் அல்லது ஆயத்த ஆடைகள் மற்றும் தோல் அல்லது செயற்கை காலணிகள் அல்லது பிற தோல் பொருள்கள் ஏற்றுமதிக்கான தற்போதுள்ள 6 மாத கால வரம்பு, ஓராண்டாக நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகம் 50 சதவீத வரியை விதித்தது, தொழிலாளா் சாா்ந்த இந்திய உற்பத்தித் துறைகளை கடுமையாக பாதித்த நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியான இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பாா்க்கப்படுகிறது.