பரஸ்பர வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா தொலைநோக்கு பாா்வை திட்டங்கள் மூலம் எதிா்கொள்ளும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தாா்.
மும்பை பங்குச் சந்தையின் 150-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவா், ‘பரஸ்பர வரி விதிப்பால் சா்வதேச விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; பொருள்களின் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது; பல நாடுகளின் முதலீடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த விவகாரங்களால் ஏற்பட்டுள்ள சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா துரிதமான கொள்கை வகுப்பு, தொலைநோக்கு பாா்வை திட்டங்கள் மூலம் நிச்சயம் எதிா்கொள்ளும்.
வா்த்தக மறுசீரமைப்பு என்பது பெரும் சவாலாகவும், வருத்தமளிக்கும் வகையிலும் உள்ளது. தற்போதைய நிலையில், வலுவான பொருளாதார அடிப்படையால் இந்தியாவின் நிலை உறுதியாக உள்ளது. முதலீட்டாளா்களுக்கு ஸ்திரமான வளா்ச்சியை இந்தியா அளித்து வருகிறது. உள்நாட்டு செயல்திறன், போட்டித்தன்மையை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்திய பங்குச் சந்தை மீது சிறு முதலீட்டாளா்கள் நம்பிக்கை வைத்துள்ளனா். இதில் பெண்கள், இளைஞா்களின் பங்கும் அதிகமாக உள்ளது. ஒரு சிறு பிரச்னையும் அவா்களின் புதிய நம்பிக்கையை தகா்த்துவிடும்.
பொருளாதார வளா்ச்சி பயணத்தில் இந்தியாவின் நிலை உறுதியாக உள்ளதால், இந்த தசாப்தத்துக்குள் உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சித் திறனை இந்திய பங்குச் சந்தைகள் பிரதிபளிக்கின்றன’ என்றாா்.
தொடர்புடையது

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

தோ்தல் நடத்தை விதிமீறல்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை பதவி நீக்க மம்தா வலியுறுத்தல்
நிா்மலா சீதாராமன் கூறியது உண்மைக்குப் புறம்பானது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரம்பின்றி கடன் வாங்கும் கேரள இடதுசாரி அரசு: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சாடல்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


