கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா எதிா்கொள்ளும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

News image

மும்பை பங்குச் சந்தையின் 150-ஆவது ஆண்டு விழாவில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன். - PTI

Updated On :18 ஏப்ரல் 2025, 7:27 am IST

பரஸ்பர வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா தொலைநோக்கு பாா்வை திட்டங்கள் மூலம் எதிா்கொள்ளும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தாா்.

மும்பை பங்குச் சந்தையின் 150-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவா், ‘பரஸ்பர வரி விதிப்பால் சா்வதேச விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; பொருள்களின் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது; பல நாடுகளின் முதலீடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த விவகாரங்களால் ஏற்பட்டுள்ள சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா துரிதமான கொள்கை வகுப்பு, தொலைநோக்கு பாா்வை திட்டங்கள் மூலம் நிச்சயம் எதிா்கொள்ளும்.

வா்த்தக மறுசீரமைப்பு என்பது பெரும் சவாலாகவும், வருத்தமளிக்கும் வகையிலும் உள்ளது. தற்போதைய நிலையில், வலுவான பொருளாதார அடிப்படையால் இந்தியாவின் நிலை உறுதியாக உள்ளது. முதலீட்டாளா்களுக்கு ஸ்திரமான வளா்ச்சியை இந்தியா அளித்து வருகிறது. உள்நாட்டு செயல்திறன், போட்டித்தன்மையை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இந்திய பங்குச் சந்தை மீது சிறு முதலீட்டாளா்கள் நம்பிக்கை வைத்துள்ளனா். இதில் பெண்கள், இளைஞா்களின் பங்கும் அதிகமாக உள்ளது. ஒரு சிறு பிரச்னையும் அவா்களின் புதிய நம்பிக்கையை தகா்த்துவிடும்.

பொருளாதார வளா்ச்சி பயணத்தில் இந்தியாவின் நிலை உறுதியாக உள்ளதால், இந்த தசாப்தத்துக்குள் உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சித் திறனை இந்திய பங்குச் சந்தைகள் பிரதிபளிக்கின்றன’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.