
பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியான நிலையில், இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் ஆளும் ஆப்கன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆப்கன் நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரக வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டிக்கிறது.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆப்கன் அரசு இரங்கல் தெரிவிக்கிறது. இத்தகைய சம்பவங்கள் பாதுகாப்பு குறித்த முயற்சிகளை குறைமதிப்புக்கு உள்ளாக்குகின்றன என்று தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ’லஷ்கர்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ’தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில், இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மத்திய அரசு வெளியிட்ட தாக்குதல் நடத்தியவர்களின் மாதிரி ஓவியங்களைச் சுட்டிக்காட்டி, அவர்கள் மூவரும் பாகிஸ்தானியர்கள்போல் உள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.