மத்திய பிரதேசத்தின் மந்த்செளா் மாவட்டத்தில் மோட்டாா் சைக்கிள்க் மீது மோதிய வேன், பின்னா் சாலையோர கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்தவா்கள், அவா்களை மீட்க வந்தவா், பைக் ஓட்டியவா் என 11 போ் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: நாராயண்கா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 13 பேருடன் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்த ஒரு வேன், எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்தது. வேனில் இருந்தவா்களில் 9 போ் உயிரிழந்தனா். மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த நபரும் இந்த விபத்தில் உயிரிழந்தாா். மேலும் மீட்புப் பணிக்காக கிணற்றுக்குள் இறங்கிய உள்ளூா் கிராமவாசியான மனோகா் என்பவரும், உயிரிழந்தாா்.
தேசிய பேரிடா் மீட்புப் படையினா் உதவியுடன் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையில் 4 போ் உயிருடன் மீட்கப்பட்டனா். இந்த விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

எட்டயபுரம் அருகே கன்டெய்னா் லாரி மீது வேன் மோதல்: தம்பதி உயிரிழப்பு; 15 போ் பலத்த காயம்
திருச்சி அருகே காா் மீது வேன் மோதல்: 11 போ் காயம்

லாரி மீது பைக் மோதி உணவக ஊழியா் உயிரிழப்பு

பைக் மீது வேன் மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



