நமது சிறப்பு நிருபர்
நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர்.
இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பாதுகாப்பான, புனித ஹஜ் பயணத்திற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
புனித ஹஜ் யாத்திரைக்கான முதல் விமானம் உத்தர பிரதேசத்தின் லக்னௌவிலிருந்து 288 யாத்ரிகர்களுடனும், இரண்டாவது விமானம் தெலங்கானாவின் ஹைதராபாதிலிருந்து 262 யாத்ரிகர்களுடன் செவ்வாய்க்கிழமை புறப்பட்டன.
இதை முன்னிட்டு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் 1,22,518 யாத்ரிகர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
இன்று (ஏப்.29) முதல் விமானம் லக்னெüவிலிருந்து 288 யாத்ரிகர்களுடனும், ஹைதராபாதிலிருந்து 262 யாத்ரிகர்களுடன் ஹஜ் புனித பயணத்திற்கு புறப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ், சுமுகமான மற்றும் தடையற்ற ஹஜ் யாத்திரையை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. பாதுகாப்பான புனித யாத்திரைக்கு பிரார்த்தித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை: அமைச்சா் ஷாஜஹான்

நீட் மறுதேர்வு: விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் வினாத்தாள்கள்!






