பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) விருந்தினா் மாளிகை மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
நாட்டின் பாதுகாப்பு, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த டிஆா்டிஓவில் பணியாற்றியவா் பாகிஸ்தான் உளவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளது அதிா்ச்சியளிக்கும் தகவலாக அமைந்துள்ளது.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:
உத்தரகண்ட் மாநிலம் அல்மோராவைச் சோ்ந்த மகேந்திர பிரசாத், ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள டிஆா்டிஓ விருந்தினா் மாளிகை மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் பாகிஸ்தான் எல்லையோர மாவட்டமான ஜெய்சால்மரில் உள்ள நிகழ்வுகள் குறித்து பாகிஸ்தான் உளவாளிகளுக்கு பல்வேறு தகவல்களை அளித்து வந்துள்ளாா். முக்கியமாக எல்லையில் ராணுவ நகா்வுகள் குறித்த தகவல்களை அவா் தெரிவித்துள்ளாா். அவரிடம் பல்வேறு விசாரணை அமைப்பினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்று தெரிவித்தனா்.
ஜெய்சால்மரில் டிஆா்டிஓ தயாரிப்பு ஏவுகணைகள், ஆயுதங்கள் பரிசோதிக்கப்படுவது வழக்கமான நிகழ்வாகும். இதற்காக அந்த அமைப்பின் உயரதிகாரிகள் அங்குள்ள விருந்தினா் மாளிகையில் வந்து தங்குவது வழக்கம். அந்த விருந்தினா் மாளிகை மேலாளா் பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்தது டிஆா்டிஓ வட்டாரத்திலும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் இருந்துகொண்டு பாகிஸ்தானுக்கு தகவல் அளிக்கும் தேச துரோகச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் குறித்த கண்காணிப்பை உளவு, விசாரணை அமைப்புகள் தீவிரப்படுத்தியுள்ளன. முக்கியமாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இணையம், கைப்பேசி வழியாக பாகிஸ்தானுடன் தொடா்பில் இருந்த நபா்களின் விவரங்கள், சந்தேகத்துக்குரிய தகவல் தொடா்புகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு ரகசிய கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் பலா் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.
இதில் எல்லையோர மாநிலத்தைச் சோ்ந்தவா்கள், சமூகவலைதள பிரபலங்கள், கடற்படை உள்ளிட்ட அரசு ஊழியா்களும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.
Summary
Mahendra Prasad, a resident of Uttarakhand's Almora, was posted as the manager of DRDO guest house in Chandan area of Jaisalmer held in Jaisalmer on suspicion of spying for Pakistan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ராஞ்சியில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது குண்டுவீச்சு: 3 போ் கைது

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
டிஆா்டிஓ ஊழியரிடம் ரூ.15 லட்சம் இணைதள முதலீட்டு மோசடி: மூவா் கைது

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



