உத்தரகண்ட் நிலச்சரிவில் 150 பேர் உயிருடன் மீட்பு, 11 ராணுவ வீரர்கள் மாயம்!

மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உத்தரகாசியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
உத்தரகாசி நிலச்சரிவில் சிக்கியவரை மீட்டுச் செல்லும் மீட்புப் படையினர்.
உத்தரகாசி நிலச்சரிவில் சிக்கியவரை மீட்டுச் செல்லும் மீட்புப் படையினர்.
Published on
Updated on
1 min read

உத்தரகண்டின் உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 150 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 11 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர் என தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

உத்தரகாசியில் ஆகஸ்ட் 5ஆம் தேதி மேகவெடிப்பால் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தராலி கிராமம் நிலச்சரிவில் புதைந்தது. இந்த இயற்கை சீற்றத்தால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதிலும், மண்ணுக்கள் புதைந்ததிலும் இதுவரை 4 போ் உயிரிழந்ததாகவும், 70க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 15 பாதுகாப்புப் படை வீரா்களும் அடங்குவா்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையிலும், தொடர் கனமழை பெய்து வருவதாலும் பிரயாக்ராஜ், அயோத்தி வாரணாசி ஆகிய மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தில், கின்னௌர் கைலாஷ் யாத்திரைப் பாதையில் சிக்கித் தவித்த 413 பக்தர்கள் மீட்கப்பட்டனர்.

துணை ஆணையர் ஜெனரல் மொஹ்சென் ஷாஹேடி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மத்திய அவசரக்கால படையின் மூன்று குழுக்கள் தராலி கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தன, ஆனால் நிலச்சரிவுகள் காரணமாக ரிஷிகேஷ்-உத்தரகாசி நெடுஞ்சாலை தடைப்பட்டதால் தாமதமாகியுள்ளது.

மோசமான வானிலை காரணமாக டேராடூனில் இருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் விமானம் மூலம் செல்வதும் தடைப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்குக் கிடைத்த தகவல்களின்படி, ராணுவம், ஐடிபிபி மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், சுமார் 150 பேரை மீட்டுள்ளது. 4 பேர் பலியாகியுள்ளதாகவும், காணாமல் போன சுமார் 50 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் மூன்று குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மிக அருகில் உள்ளதாகவும், பாதை சரியானதும் அவர்கள் அங்குச் செல்வார்கள் என்று கூறினார்.

Summary

About 150 people have been rescued from Uttarakhand's Uttarkashi, struck by flash floods a day ago, even as 11 army troops remain missing, an NDRF officer said on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com