

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் காட்டுத் தீ காரணமாக கண்ணிவெடிகள் வெடித்தன.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் ஞாயிற்றுக்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக அரை டஜன் கண்ணிவெடிகள் வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் இந்த சம்பவத்தில் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று அவர்கள் மேலும் கூறினர்.
தீ இன்னும் கொந்தளிப்பாக இருப்பதாகவும், தீயை அணைக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.
எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் விதமாக ஊடுருவல் தடுப்பு அமைப்பின் ஒரு பகுதியாக கண்ணிவெடிகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.