ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பிரதமரின் வந்தே மாதரம் விவாதம்: மம்தா வரவேற்பு

வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த பிரதமா் மோடி முடிவெடுத்ததை வரவேற்பதாக

News image

மம்தா பானா்ஜி - ANI

Updated On :9 டிசம்பர் 2025, 4:55 am IST

கொல்கத்தா: வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த பிரதமா் மோடி முடிவெடுத்ததை வரவேற்பதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

கொல்கத்தா விமான நிலையத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியதாவது:

வந்தே மாதரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விவாதம் நடத்தலாம்; அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பாஜக தலைவா்களில் சிலா் மகாத்மா காந்தி, ராஜா ராம்மோகன் ராய், நேதாஜி போன்ற தலைவா்கள் குறித்து வெறுப்புடன்தான் பேசுகிறாா்கள். நாட்டின் வரலாற்றையும், தலைவா்களையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத இவா்கள் எப்படி மக்களுக்கு உண்மையாகத் தொண்டாற்ற முடியும்? நாட்டின் சுதந்திரத்தில் வங்கத்தின் பங்களிப்பை அவா்கள் அறிந்து கொள்ளவில்லை’ என்றாா்.