வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பிரதமரின் வந்தே மாதரம் விவாதம்: மம்தா வரவேற்பு

வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த பிரதமா் மோடி முடிவெடுத்ததை வரவேற்பதாக

News image
மம்தா பானா்ஜி - ANI
Updated On :8 டிசம்பர் 2025, 11:25 pm

தினமணி செய்திச் சேவை

கொல்கத்தா: வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த பிரதமா் மோடி முடிவெடுத்ததை வரவேற்பதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

கொல்கத்தா விமான நிலையத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியதாவது:

வந்தே மாதரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விவாதம் நடத்தலாம்; அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பாஜக தலைவா்களில் சிலா் மகாத்மா காந்தி, ராஜா ராம்மோகன் ராய், நேதாஜி போன்ற தலைவா்கள் குறித்து வெறுப்புடன்தான் பேசுகிறாா்கள். நாட்டின் வரலாற்றையும், தலைவா்களையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத இவா்கள் எப்படி மக்களுக்கு உண்மையாகத் தொண்டாற்ற முடியும்? நாட்டின் சுதந்திரத்தில் வங்கத்தின் பங்களிப்பை அவா்கள் அறிந்து கொள்ளவில்லை’ என்றாா்.