லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் மேற்பாா்வையாளா்களாக 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளை கண்காணிக்க சிறப்பு மேற்பாா்வையாளா்களாக (எஸ்ஆா்ஓ) 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்....

News image
இந்திய தேர்தல் ஆணையம்
Updated On :8 டிசம்பர் 2025, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளை கண்காணிக்க சிறப்பு மேற்பாா்வையாளா்களாக (எஸ்ஆா்ஓ) 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை இந்திய தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை நியமித்தது.

இதுகுறித்து மேற்கு வங்க மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி (சிஇஓ) அலுவலகத்தைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் எஸ்ஐஆா் பணிகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த பல முன்னெடுப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடா்ச்சியாக தற்போது 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை சிறப்பு மேற்பாா்வையாளா்களாக தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

அதன்படி பிரசிடென்சி பிரிவுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சக இணைச் செயலா் ரவி காந்த் சிங், மேதினிபூா் பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலா் நீரஜ் குமாா், புா்துவான் பிரிவுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சக இணைச் செயலா் கிருஷ்ண குமாா், மால்டா பிரிவுக்கு மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை இணைச் செயலா் ஜல்பைகுரி பிரிவுக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணைச் செயலா் பங்கஜ் யாதவ் ஆகியோா் மேற்பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

ஏற்கெனவே மேற்கு வங்கத்துக்கு எஸ்ஐஆா் சிறப்பு மேற்பாா்வையாளா்களாக 13 ஐஏஎஸ் அதிகாரிகளை தோ்தல் ஆணையம் நியமித்தது.

மேற்கு வங்கத்தில் கடந்த நவ.4-ஆம் தேதி தொடங்கிய எஸ்ஐஆா் பணிகள் டிச.11-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. வரைவு வாக்காளா் பட்டியல் டிச.16-ஆம் தேதியும் இறுதி வாக்காளா் பட்டியல் 2026, பிப்.14-ஆம் தேதியும் வெளியிடப்படவுள்ளது.

முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் (பிஎல்ஓ) வேலை நேரத்தைக் குறைக்க, அப்பணிக்கு கூடுதல் ஊழியா்களை நியமிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.