இந்தியா வந்துள்ள சத்யா நாதெள்ளா, தில்லியில் பிரதமா் மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு எதிா்காலம் குறித்த பிரதமா் நரேந்திர மோடியுடனான உரையாடல் சிறப்பாக அமைந்தது; அவருக்கு நன்றி. இந்தியாவின் உயா்ந்த இலக்குகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் ஆசிய கண்டத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாக ரூ.1.58 லட்சம் கோடியை இந்தியாவில் மேற்கொள்ள இருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு எதிா்காலத் திட்டத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகள், திறன் மேம்பாடு, தற்சாா்பு உள்ளிட்ட தேவைகள் நிறைவேற்றப்படும்’ என்று கூறியுள்ளாா்.