தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மகாராஷ்டிரத்தில் 11 மாவோயிஸ்டுகள் சரண்!

மகாராஷ்டிரத்தில் 11 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :10 டிசம்பர் 2025, 6:24 pm IST

மகாராஷ்டிரத்தின், கட்சிரோலி மாவட்டத்தில் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 11 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

கட்சிரோலி மாவட்டத்தில், கூட்டாக ரூ.82 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 11 மாவோயிஸ்டுகள் இன்று (டிச. 10) காவல் துறை உயர் அதிகாரி ராஷ்மி சுக்லா முன்னிலையில் சரணடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தக் குழுவில் 88 வழக்குகளில் தொடர்புடைய ரமேஷ் (எ) பஜூ குட்டி லெகாமி என்பவரும் சரணடைந்துள்ளார். இவரைக் கைது செய்வதற்கு, காவல் துறையினர் ரூ.16 லட்சம் சன்மானம் அறிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகள் அனைவரும் தங்களது ஆயுதங்கள் மற்றும் சீருடைகளை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இத்துடன், சரணடைந்த மாவோயிஸ்டுகளுக்கு மாநில அரசின் திட்டங்களின் மூலம் மறுவாழ்விற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மகாராஷ்டிரத்தில் மாவோயிஸ்டுகளின் தாக்கம் அதிகமுள்ளதாகக் கருதப்படும் கட்சிரோலி மாவட்டத்தில், இதுவரை 783 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Eleven Maoists, who were wanted with a bounty on their head in Maharashtra's Gadchiroli district, have surrendered to security forces.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.