கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிபிஎஸ்இ 2026ல் செய்த மிகப்பெரிய மாற்றம்! பொதுத் தேர்வெழுதுவோர் கவனிக்க!!

சிபிஎஸ்இ 2026ல் செய்த மிகப்பெரிய மாற்றங்கள் குறித்து பொதுத் தேர்வெழுதுவோர் கவனிக்க வேண்டும்.

News image
சிபிஎஸ்இ- பிரதிப் படம்
Updated On :12 டிசம்பர் 2025, 11:10 am

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ, வரும் 2026ஆம் ஆண்டு முதல் பல்வேறு மாற்றங்களை செய்து அதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

அதாவது, வரும் 2026ல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள், தேர்வு அழுத்தம் இல்லாமல் எழுதும் வகையில் சில மாங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை பொதுத் தேர்வு போன்ற அறிவிப்புகளையும் செய்துள்ளன.

அறிவியல், சமூக அறிவியல் வினாத்தாள்களில் மாற்றம்

வரும் 2026 முதல் அறிவியல் வினாத்தாள் உயிரியல், வேதியியல், இயற்பியல் என மூன்று பிரிவுகளைக் கொண்டிருப்பது போல, சமூக அறிவியல் வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியல் என 4 பிரிவுகளைக் கொண்டிருக்கும்.

ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வுகள்

2026 முதல் சிபிஎஸ்இ இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்தும். முதன்மைத் தேர்வு பிப்ரவரியல். அனைவரும் எழுத வேண்டும். தேவைப்படுவோர் மே மாதமும் தேர்வெழுதி மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்ளலாம். இந்த மே மாதம் ஏதேனும் 3 பாடங்களை மட்டுமே எழுத முடியும். எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்களோ அது இறுதியானது.

75 சதவீத வருகைப் பதிவு

சிபிஎஸ்இயில் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம். குறைந்தால் தேர்வெழுத அனுமதிக்கப்படாது.

9 புள்ளிகள் கொண்ட மதிப்பிடும் முறை

2026 முதல் 9 புள்ளிகளைக் கொண்ட மதிப்பிடும் முறை அறிமுகம். ஏ1 முதல் இ என்ற ஆங்கில எழுத்துகள் அடிப்படையில் மதிப்பிடப்படும். ஒவ்வொரு மதிப்பெண்ணும், ஒட்டுமொத்தமாக மாணவர்கள் எடுத்த மதிப்பெண்ணுடன் ஒப்பிடப்பட்டு மதிப்பிடப்படும்.

தேர்வு முடிக்கு முன்பே சேர்க்கை

மாணவர்கள் 10ஆம் வகுப்புத் தேர்வெழுதியிருந்தாலே சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள். மதிப்பெண் குறைந்தாலோ அல்லது தோல்வியடைந்தாலும் வரும் மே மாதம் நடக்கும் துணைத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற பள்ளிகள் உதவ வேண்டும்.

விடைத்தாள்களில் மாற்றம்

50 சதவீத திறனறி கேள்விகள் - சரியான விடையைத் தேர்வு செய்தல், மதிப்பீடுகளை செய்து விடையைக் காண்பது, தரவுகளின் அடிப்படையில் கேள்விகள்

20 சதவீதம் அப்ஜெக்டிவ் கேள்விகள்.

30 சதவீதம் சிறு மற்றும் பெரிய பதில்களுக்கான வினாக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.