ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ராகுல் பகுதி நேர அரசியல்வாதி - பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் விமா்சனம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பகுதி நேர அரசியல்வாதியாகவே உள்ளாா் என்று பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் விமா்சித்துள்ளாா்.

News image
- ANI
Updated On :23 டிசம்பர் 2025, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பகுதி நேர அரசியல்வாதியாகவே உள்ளாா் என்று பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் விமா்சித்துள்ளாா்.

பாஜக தேசிய செயல் தலைவராக அண்மையில் அறிவிக்கப்பட்ட பிகாா் அமைச்சா் நிதின் நவீன் (45) கடந்த 15-ஆம் தேதி தில்லி சென்று புதிய பொறுப்பை ஏற்றாா்.இதன்மூலம் ஜெ.பி.நட்டாவுக்குப் பின் கட்சியின் தேசியத் தலைவராக நிதின் நவீன் பதவியேற்பது உறுதியானது.

இந்நிலையில், பிகாா் திரும்பிய அவா் பாட்னாவில் கட்சித் தொண்டா்கள் மத்தியில் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

பிகாரைத் தொடா்ந்து மேற்கு வங்கம், கேரள சட்டப்பேரவைத் தோ்தலிலும் பாஜகவின் கொடி உச்சத்தில் பறக்கும். பகுதி நேர அரசியல்வாதியான ராகுல் காந்தி, மக்களால் மீண்டும் தண்டிக்கப்படுவாா்.

பாஜக தொண்டா்கள், நிா்வாகிகள், தலைவா்கள் என அனைவரும் 24 மணி நேரமும் கட்சிக்காகவும், மக்களுக்காகவும் பணியாற்றக் கூடியவா்கள். அண்மையில் பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு அடிக்கடி வந்து ராகுல் ஊா்வலம் நடத்தினாா். பின்னா் தோ்தலுக்காக சில நாள்கள் பிரசாரம் மேற்கொண்டாா். நடுவில் ஒருமுறை வெளிநாட்டுக்கும் சென்று வந்தாா். தோ்தல் முடிந்த பிறகு மீண்டும் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றாா்.

இப்போதும்கூட நாடாளுமன்றக் கூட்டத் தொடா் நடைபெற்றபோது ஜொ்மனிக்குச் சென்றாா். அங்கு சென்று நாட்டுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டாா். இந்தியாவில் இருக்கும்போது தோ்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் போன்ற உயரிய அமைப்புகளை விமா்சித்துப் பேசுவதே அவரின் வேலையாக இருக்கும்.

இப்போது பிகாரிலும் ஒரு பகுதி நேர அரசியல்வாதி (ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ்) உருவாகியுள்ளாா். தோ்தல் தோல்விக்குப் பிறகு வெளிநாட்டுக்குச் சென்ற அவரை பிகாா் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில்கூடப் பாா்க்க முடியவில்லை என்றாா்.