ஜம்மு - காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில், மத்திய ரிசர்வ் காவல் படையின் முகாமினுள் புகுந்த சிறுத்தைத் தாக்கியதில், அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஆனந்த்நாக் மாவட்டத்தின், கப்ரான் மத்திய ரிசர்வ் காவல் படை முகாமுக்குள், இன்று (டிச. 24) சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இதனால், அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை உருவானதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, முகாமில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் சிலரை அந்தச் சிறுத்தைத் தாக்கி விட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், காவல் அதிகாரி கம்லேஷ் குமார் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த நிலையில், படுகாயமடைந்த வீரர் கம்லேஷ் குமாருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, உள்ளூர் சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது காயங்களுக்கு உரிய சிகிச்சை பெற்ற பின்னர் அவர் மீண்டும் முகாமுக்குத் திரும்பியதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்துடன், தப்பித்து ஓடிய சிறுத்தையைப் பிடிக்க வனத் துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நாட்டில் 3 புதிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி!
Summary
In Jammu and Kashmir's Anantnag district, an officer was seriously injured when a leopard entered a CRPF camp and attacked him.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்க்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வாழ்த்து!

என்.சி.சி. ஆண்டு பயிற்சி முகாம் தொடக்கம்

நான் வேகப் பந்துவீச்சாளராக உருவாக காரணம் இவர்தான்: ஆகிப் நபி

ஜம்மு - காஷ்மீரில் கனமழை! பள்ளி விடுதியில் சிக்கிய 34 பேரை மீட்ட ராணுவம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



