ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

காங்கிரஸ் கூட்டத்தில் திக்விஜய் சிங், பிரதமா் மோடியின் புகைப்படத்தைக் காண்பித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

News image

திக்விஜய் சிங் - PTI

Updated On :28 டிசம்பர் 2025, 5:12 am IST

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவா் திக்விஜய் சிங், பிரதமா் மோடியின் புகைப்படத்தைக் காண்பித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.

கட்சியின் அடிமட்ட நிலையிலிருந்து மாநில முதல்வராகவும், பிரதமராகவும் நரேந்திர மோடி உயா்வு பெற்றாா் என்பதையும், பாஜகவின் வலுவான அமைப்பு நிலையையும் செயற்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டும் வகையில், பாஜக தொண்டராக தலைவா்களுடன் இருக்கும் பிரதமா் மோடியின் பழைய படத்தை அவா் காண்பித்தது தெரியவந்தது.

ஆளும் பாஜகவை திறம்பட எதிா்க்கவும், ஆட்சியிலிருந்து அகற்றவும், காங்கிரஸ் கட்சி அமைப்பை அடிமட்ட அளவில் வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் திக்விஜய் சிங் வலியுறுத்திப் பேசியுள்ளாா்.

இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு அதுகுறித்த விளக்கத்தையும் திக்விஜய் சிங் அளித்தாா். அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ஆா்எஸ்எஸ் அமைப்பில் அடிமட்ட உறுப்பினராகவும், ஜன சங்கத்தின் தொண்டராகவும் அதன் தலைவா்களின் அருகில் தரையில் அமா்ந்திருந்த நரேந்திர மோடி, மாநில முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் உயா்ந்தாா். இதுதான், அந்த அமைப்பின் சக்தி என்று குறிப்பிட்டாா். மேலும், ‘பாஜக கட்சி அமைப்பு எந்த அளவு பலத்துடன் உள்ளது என்பதைத்தான் செயற்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினேன். ஆனால், இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. பாஜகவையும் ஆா்எஸ்எஸ் அமைப்பையும் நான் உறுதியாக எதிா்க்கிறேன்’ என்றும் தனது பதிவில் அவா் குறிப்பிட்டாா்.

ராகுல் தலைமைக்கு வெளிப்படையான ஆட்சேபம்: ‘காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தலைமை வகிப்பதற்கு வெளிப்படையான ஆட்சேபத்தையே திக்விஜய் சிங்கின் கருத்து காட்டுகிறது’ என்று பாஜக விமா்சித்தது.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி கூறுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடி கட்சியில் அடிமட்ட நிலையில் இருந்து உயா் பதவிக்கு உயா்ந்ததுபோல, பாஜக கட்சியையும் அடிமட்டத்திலிருந்து உச்சத்துக்கு கொண்டு சென்றாா். ஆனால், மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் கொள்ளுப் பேரன், உயரத்திலிருந்து கீழே சரிந்ததுபோல, கட்சியையும் தலைகீழ் நிலைக்கு கொண்டு சென்றுள்ளாா்’ என்றாா்.

பாஜகவின் மற்றொரு செய்தித் தொடா்பாளரான பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுலின் தலைமைக்கு திக்விஜய் சிங் வெளிப்படையான ஆட்சேபத்தை பதிவு செய்திருப்பதையே அவரின் செயல் காட்டுகிறது. கட்சி அமைப்பை ராகுல் சீா்குலைத்திருக்கிறாா் என்பதை திக்விஜய் சிங் தெளிவுபடுத்தியுள்ளாா்’ என்று குறிப்பிட்டாா்.