
அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை(பிப். 1) தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் அவர் உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர்,
"அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவப்படிப்புக்கு கூடுதலாக 75 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும்.
இதையும் படிக்க | கிசான் அட்டை மூலம் ரூ. 5 லட்சம் வரை கடன்! - நிதியமைச்சர் அறிவிப்பு
வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, 2028 வரை இந்த திட்டம் செயல்படும்.
நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
கல்விக்கான செயற்கை நுண்ணறிவு மையம் உருவாக்கப்படும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்டு ஒப்பிடும்போது மத்திய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது.
இந்தியாவில் பொம்மைகளைத் தயாரிக்க சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும். பொம்மை தயாரிப்பில் இந்தியா உலக அளவில் மையமாக திகழ பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் கொண்டு வரப்படும்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.