மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவிகளுக்கு விடுதி! கல்வித் துறைக்கான அறிவிப்புகள்!

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் மாணவிகளுக்கு விடுதிகள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2026, 6:38 am

இணையதளச் செய்திப் பிரிவு

உயர்கல்வித் துறையில் பல நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1) தெரிவித்தார்.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார்.

இதில் கல்வித் துறைக்கான ஒதுக்கீடு குறித்து அவர் பேசியதாவது,

'' 15,000 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் வரைகலை (அனிமேஷன்) ஒளிக்காட்சிகள், விளையாட்டு மற்றும் சித்திரக்கலை (காமிக்ஸ்) படைப்பாற்றல் ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.

மாநிலத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் மாணவிகளுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.

மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான வரி 2 சதவீதமாக குறைப்பு.

கால்நடை மற்றும் துணை கால்நடை மருத்துவக் கல்லூரிகள், பரிசோதனை ஆய்வகங்கள், இனப்பெருக்க வசதிகள் ஏற்படுத்தப்படும்.

ஆயுர்வேதத்திற்காக புதிதாக 3 அகில இந்திய நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் உயர் தரங்களுக்கு மேம்படுத்தப்படும்.

ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் மேம்படுத்தப்படும்.

தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் 5 பல்கலைக்கழக நகரங்களை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு ஆதரவு.

சுயசார்பு இந்தியாவின் முக்கிய உந்துசக்தியாக சேவைத் துறையை மையமாகக் கொண்ட 'கல்வி முதல் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு' நிலைக்குழு அமைக்கப்படும்.

இந்தக் குழு, வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளை மேம்படுத்துவதற்கான துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

கடந்த 12 ஆண்டுகளாக பணவீக்க விகிதம் தொடர்ந்து நிலையான விகிதத்தில் இருந்து வருகிறது.

நீடித்த வளர்ச்சி, நிலைத்தன்மை, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.