ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும்!

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது:
ஆதிச்சநல்லூரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஆதிச்சநல்லூரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Updated on
1 min read

ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டின் பொதிகை மலை, ஹிமாசல், உத்தரகண்ட், ஜம்முவில் மலையேற்றத்தை ஊக்குவிக்க திட்டம் கொண்டுவரப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும். கலாசார செழுமையை விளக்கும் வகையில் கலாசார மையம் உருவாக்கப்படும்.

நாடு முழுவதும் 15 தொல்லியல் தளங்கள் சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படும். பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.

Summary

Finance Minister Nirmala Sitharaman has announced in the Union Budget that a cultural center will be established in Adichanallur.

ஆதிச்சநல்லூரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
சிறு, குறு, நடுத்தர நிறுவன வளர்ச்சிக்கு ரூ. 10,000 கோடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com