பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

சிறு, குறு, நடுத்தர நிறுவன வளர்ச்சிக்கு ரூ. 10,000 கோடி!

சிறு, குறு, நடுத்தர தொழில் துறை வளர்ச்சிக்கு 3 முக்கிய அணுகுமுறைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

News image

நிர்மலா சீதாராமன் - படம் - பிடிஐ

Updated On :1 பிப்ரவரி 2026, 11:36 am IST

சிறு, குறு, நடுத்தர தொழில் துறை வளர்ச்சிக்கு 3 முக்கிய அணுகுமுறைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (பிப். 1) அறிவித்தார்.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார்.

இதில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு குறித்து அவர் பேசியதாவது,

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியா நிதியில் கூடுதலாக ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொள்கலன் உற்பத்திக்கு ரூ. 10,000 கோடி முதலீடு

பொதுக்கட்டமைப்புகளுக்கான மூலதன ஒதுக்கீடு ரூ.12.2 லட்சம் கோடி.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பணப்புழக்க ஆதரவை மேம்படுத்த, நான்கு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

2 வது, 3வது நிலை நகரங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.