உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

உணவு டெலிவரி போல இனி கார் டெலிவரி! விரைவில் அறிமுகம்

கார் ஷோரூம் செல்லாமல் ஆன்லைனில் புக்கிங் செய்தால் அதை வீட்டுக்கு கொண்டு வந்து டெலிவரி செய்யும் வசதி...

News image
Updated On :5 பிப்ரவரி 2025, 4:51 pm IST

இன்றைய நவீன காலத்தில் எதுவும் சாத்தியமே என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் விதமாக, வீட்டிலிருந்தவாறே உணவுப் பொருள்களை ஆர்டர் செய்து அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறையைப் பின்பற்றி இனிமேல் புதிய கார் வாங்க விருப்பப்படுவோர்கூட, கார் ஷோரூம் செல்லாமல் ஆன்லைனில் புக்கிங் செய்தால் அதை வீட்டுக்கு கொண்டு வந்து டெலிவரி செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

இந்த புதிய வசதியை ஆன்லைன் வர்த்தக சேவை நிறுவனமான ‘ஸெப்டோ’ தொடங்கவுள்ளது. இதற்காக, முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்கோடா’வுடன் ஸெப்டோ கைகோர்த்துள்ளது.

இந்த வசதியை பயன்படுத்தி புதிய ஸ்கோடா காரை வாங்குவதற்கான விவரங்கள் அனைத்தையும் ஸெப்டோ ஆன்லைன் தளத்தில் பதிவு செய்துகொண்டால், வாடிக்கையாளர் புக்கிங் செய்த கார், குறைந்தபட்சமாக வெறும் 10 நிமிடங்களில் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படுமென்றும் சொல்லப்படுகிறது.

வரும் பிப். 8-ஆம் தேதி முதல் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுமென்று ஸ்கோடாவும் ஸெப்டோவும் தெரிவித்துள்ளன. அந்த வகையில், ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடலான ‘கைலாக்’ காரை இந்த வசதியை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நடைமுறை எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது குறித்த சந்தேகம் இருந்தாலும், விரைவில் இந்த நடைமுறை குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.