40 மணி நேரம் கை, கால்களில் விலங்கு; கழிப்பறைக்குக்கூட அனுமதி இல்லை; இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? - காங்கிரஸ்

இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? என காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.
Congress MP Randeep Surjewala
கோப்புப் படம்
Updated on
1 min read

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டது குறித்து இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? என காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"இந்திய மக்கள் 7.25 லட்சத்திற்கும் அதிகமானோர் சிறந்த வாழ்க்கையைத் தேடி அமெரிக்கா சென்றனர். பிரதமர் மோடி அரசு, ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாக்குறுதியை நிறைவேற்றாததாலும், நாட்டில் 40% வேலையின்மை இருப்பதாலும் அவர்கள் தங்கள் குடும்பங்களுக்காகச் சம்பாதிக்க அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது.

தற்போது இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் 40 மணி நேரம் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தனர். அவர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டிருந்தது. கப்பல்களில் கன்டெய்னரில் ஏற்றப்பட்ட அவர்கள், கழிப்பறைகளைப் பயன்படுத்தக்கூட அனுமதிக்கப்படவில்லை. இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? பாஜக அரசு ஏன் அமைதியாக இருக்கிறது?

ஆயிரக்கணக்கான இந்திய சகோதர, சகோதரிகள் அமெரிக்க தடுப்பு மையங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்படி இங்கு கொண்டு வரப்படுவார்கள்?

'அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் பங்களித்துள்ளனர், அவர்கள் அமெரிக்காவீல் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்' என்று பிரதமர் மோடியால் ஏன் சொல்ல முடியவில்லை?

குறைந்தபட்சம் அவர்களை மரியாதையுடன் இங்கு அழைத்து வந்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com