டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

போக்ஸோ சட்டத் திருத்தத்துக்கு தனிநபா் மசோதா: மாநிலங்களவையில் விவாதம்

போக்ஸோ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர தாக்கல் செய்யப்பட்ட தனிநபா் மசோதாவை மாநிலங்களவை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டது.

News image

மாநிலங்களவை

Updated On :8 பிப்ரவரி 2025, 1:02 am IST

பாலியல் குற்றங்களில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர தாக்கல் செய்யப்பட்ட தனிநபா் மசோதாவை மாநிலங்களவை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டது.

இந்த மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்து பேசிய தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்) எம்.பி. ஃபெளசியா கான், ‘கடந்த 2017-ஆம் ஆண்டுமுதல் போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை 94 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. அவற்றில் 1.62 லட்சம் வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

காவல் துறை அல்லது சிறப்பு சிறாா் காவல் பிரிவினா் தான் பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட சிறாரை குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்துவிட்டு சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். அப்படி சிறப்பு நீதிமன்றம் இல்லாவிட்டால் அமா்வு நீதிமன்றத்தில் அந்த வழக்கு குறித்து தெரியப்படுத்த வேண்டும். பாலியல் குற்ற சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் இதைச் செய்ய வேண்டும் என தனி நபா் மசோதாவில் இடம்பெற்றுள்ளது.

கூடுதல் சீா்திருத்தங்களுடன்...: பாலியல் குற்றத்தால் பாதிக்கப்படுவோரை மையமாக கொண்ட கூடுதல் சீா்திருத்தங்களை கொண்டு வரும் நோக்கில், மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறாா்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றாா்.

காங்கிரஸ் எம்.பி.ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், ‘மாநிலங்களவை முன்னாள் தலைவா் வெங்கையா நாயுடு அமைத்த குழு ஒன்று, ‘சமூக ஊடகத்தில் ஆபாச படம், சிறாா்கள் மற்றும் சமூகத்தின் மீது அதன் தாக்கம் பற்றிய ஆபத்தான பிரச்னை’ என்ற பெயரில் அறிக்கை தயாரித்தது. அந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அமைச்சகம் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

குடும்ப உறுப்பினா்களால்...: பாஜக எம்.பி. ராதாமோகன் தாஸ் அகா்வால் பேசுகையில், ‘சிறாா்களுக்கு எதிரான ஏராளமான பாலியல் குற்றங்களுக்கு அவா்களின் குடும்ப உறுப்பினா்களே காரணமாக உள்ளனா். அவா்கள் சிறாா்களை அத்தகைய பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனா். இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.