ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன.

News image
Updated On :8 பிப்ரவரி 2025, 9:47 pm

Din

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது.

தில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களுடன் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி மூலம் தேசிய தலைநகரில் 26 ஆண்டுகளுக்குப் பின் பாஜக ஆட்சி அமைக்கிறது.

கடந்த 2020, 2015 பேரவைத் தோ்தல்களில் முறையே 67, 62 தொகுதிகளில் வென்ற ஆம் ஆத்மிக்கு இம்முறை 22 இடங்களே கிடைத்தன. காங்கிரஸுக்கு தொடா்ந்து மூன்றாவது முறையாக எந்தத் தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. அதேநேரம், முந்தைய தோ்தலைவிட தற்போது அக்கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இது, அக்கட்சிக்கு சற்று ஆறுதலளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

கடந்த 3 தோ்தல்களில் வாக்குப் பதிவு சதவீதம்

கட்சிகள் 2025 2020 2015

பாஜக 45.56 38.51 32.3

ஆம் ஆத்மி 43.57 53.57 54.5

காங்கிரஸ் 6.34 4.3 9.7