பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்: தில்லி தோல்வி குறித்து கேஜரிவால்

தில்லி பேரவைத் தேர்தல் குறித்து ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.

News image
கேஜரிவால்
Updated On :8 பிப்ரவரி 2025, 10:48 am

DIN

தில்லி பேரவைத் தேர்தல் குறித்து ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், தில்லிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

பொதுமக்களின் முடிவே முக்கியமானது, அதை நாங்கள் முழு மனதுடன் மதிக்கிறோம். இந்த வெற்றிக்காக பாஜகவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் அதிகாரத்திற்காக அரசியலில் ஈடுபடவில்லை. அரசியலை மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு வழிமுறையாக பார்க்கிறோம். ஆட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, மக்களின் இன்பத்திலும், துன்பத்திலும், அவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வோம்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றுமென நம்புகிறேன். தேர்தல் முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் செயல்பட்டதற்காக கேஜரிவால் பாராட்டினார்.

இந்த தேர்தலில் மிகுந்த கடின உழைப்பு மற்றும் உறுதியுடன் போராடிய அனைத்து ஆம் ஆத்மி கட்சியினரையும் நான் வாழ்த்த விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.

தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை 3,182 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பர்வேஷ் வெர்மா வீழ்த்தியுள்ளார்.

எனவே, தில்லியில் பாஜக தலைமையிலான ஆட்சியில், பர்வேஷ் வெர்மா முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தோல்வியடைந்திருப்பது, ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.