அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்.

News image
பிரதமர் மோடி- கோப்புப் படம்
Updated On :10 பிப்ரவரி 2025, 10:49 pm

Din

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்.

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஓரிடத்தில் கூட வெல்ல முடியாமல் போனது.

இந்நிலையில், மக்களவையில் திங்கள்கிழமை மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்ட பாஜக எம்.பி.க்கள் அவை தொடங்கியதும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று பிரதமா் நரேந்திர மோடியின் பெயரைக் கூறி முழக்கமிட்டனா். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி ஆகியோா் வேறு விஷயங்களைப் பேச முற்பட்டனா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கேள்வி நேரம் தொடங்குவதாக அறிவித்ததையடுத்து, பாஜக உறுப்பினா்கள் முழக்கமிடுவதை நிறுத்தினா்.

இதே போல மாநிலங்களவை தொடங்கியபோதும் பாஜக எம்.பி.க்கள் எழுந்து நின்று மோடியை வாழ்த்தி முழக்கமிட்டனா். அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் பேசத் தொடங்கியதும் பாஜக எம்.பி.க்கள் முழக்கமிடுவதை நிறுத்திக் கொண்டனா்.